Friday, April 11, 2008

என் முதல் கவிதை...

"றோட்டு" மேல போறான் ஒரு கேடி
அவன் வளர்க்கிறான் "பிரஞ்சு" தாடி
அவன் கையில இருக்கு வெள்ளை பீடி
அதால் ஆகப்போறான் சீக்கிரமா "பாடி"

தினந்தோறும் டப்பாங்கூத்து ஆடி
தெருவெல்லாம் கானாப்பாட்டு பாடி
அந்த கேடிமேல கண்ண வச்சாள் "லேடி"
அவள் போகப்போறாள் அவனோட ஓடி

கேடி சீதனமா கேட்டுப்புட்டான் கோடி
அத கேட்ட இடமோ மாடி...
கோபத்தாலே தள்ளிவிட்டா "லேடி"
கேடி ஆகிப்புட்டான் உடனே "பாடி"

பேராசை பெருநட்டம் தம்பி
நீ போகாதே பெண்களை நம்பி...
பின்னால் பத்திக்கொண்டு எரியுமே கும்பி
அதால் நீ அழுவாய் வெம்பி வெம்பி!

கேடயக் குறிப்பு: எந்தக் கருத்துக்களும் பொதுவானவை அல்ல, தொப்பி சரியா இருக்கிறவங்க மட்டும் போட்டுக்கொள்ளலாம். ;)

இதை நான் என்ன யோசனையில் எழுதினேன் என்று தெரியவில்லை... என்ன அற்புதமான தமிழ!? ஹீஹீஹீ...

கல்லூரி காலத்தை நினைவூட்டிய நிமலுக்கு நன்றி!

Sunday, April 6, 2008

Vegetarian Porgressive Grindcore!!!

Bahahaha...



... thanks SlipKnut!

Thursday, March 20, 2008

Meeru Emi Chesthunaaru!!?

What was,
Does not matter!

What could be,
'Tis just chatter...

What is,
You should treasure!

Loose not faith,
Hope for better...

'Cos worries
Don't last forever!!!

Wednesday, March 19, 2008

அவளினடி...



அடித்தாள்,
கோபம் வந்தது.
அரவணைப்பாளென்றெதிர்பார்த்தேன்,
மீண்டும், அடித்தாள்!!
பொறுத்தேன்...

கலங்கிய கண்கள் எரிந்தன
உவர் நீர் வழிந்து,
வறுமையாயிருந்த நாவில் தாகத்தை அதிகரித்தது.
அடியின் வலிமையால், உடல் நொந்தேன்
அடித்தாள்!!!
தன் கரங்களால் எனை சூழ்ந்தாள்,
தினறினேன்.

அடித்தாள்!
சிரித்தேன்.
அடியின் வலியில் துன்பம் மறந்தேன்.
அவளுடன் இருக்கும் பொழுது,
யாரும் என்னை எதுவுமே செய்ய முடியாதல்லவா?

அந்த நொடிக்காக வாழ்வது எத்தனை சுலபம்,
கடலன்னையின் மடியிலிருக்கையிலே!